தமிழகத்தில் கள்ள சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிய திராணியற்ற
திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி நடத்தினர் .இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு சித்ரா மாவட்ட (கிழக்கு)மகளிர் அணித்தலைவர், மேலும் லீலாவதி மாவட்ட (மேற்கு )மகளிர் அணி துணைத் தலைவர் தலைமை தாங்கினார்.

மோனிகா,விமலா மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர்கள் தனபாலன் , மகுடீஸ்வரன், சொக்கன், ஜெயராமன், ஆனந்தன், பழனிவேல் சாமி, பாக்கியலட்சுமி மேலும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
