தட்டைப்பயிறில் பயிர் மதிப்பீட்டாய்வு..

காரீப் பருவம் தட்டைப்பயறுக்கான பயிர் மதிப்பீட்டாய்வு சீவல்சரகு கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிர் அறுவடை பரிசோதனை திடலின் அளவு 10×5 சதுர மீட்டர் ஆகும். இந்த பயிர் அறுவடை பரிசோதனையில் திண்டுக்கல் மாவட்ட துணை இயக்குநர் (புள்ளியியல் மற்றும் பொருள் இயல் துறை) நா. கருப்பையா, உதவி இயக்குநர் (புள்ளியியல் மற்றும் பொருள் இயல் துறை) சுரேஷ், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் க. செல்வநாயகம், ஆத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் சபரீஸ்வரன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்விற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மேலும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here