புனித அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது . கிழக்கு மரியனாதபுரம் பங்குத்தந்தை மார்ட்டின் அவர்கள் திருப்பலி நடத்தி மாணவிகள் அனைவரையும் வாழ்த்தினார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கிறிஸ்து பிறப்பு நாடகங்களும் நடத்தப்பட்டன.




திண்டுக்கல் மாவட்டத்தில் கின்னஸ் ரெக்கார்டு மரம் நடும் விழாவானது இடையகோட்டை கிராமத்தில் நடைபெற்றது . இதில் அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 5800 மரங்களை குறிப்பிட்ட நேரத்தில் நட்டு முடித்தனர்.
