திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழாவது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சார்ந்த கிராம மக்கள் அளித்த மனுவின் படி 23 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் ஐந்து நபர்களுக்கு குடும்ப அட்டை மற்றும் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
அருகில் உதவி இயக்குனர் சிவக்குமார் (நில அளவை) மற்றும் வட்டாட்சியர் முத்துச்சாமி உட்பட பலர் இருந்தனர்.
