திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிரியல் நோய் மருத்துவச் சங்கத்தின் 14 வது ஆண்டு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கமானது நடைபெற்றது.

திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை போன்ற பல்வேறு நகரில் உள்ள மூத்த மருத்துவ வல்லுநர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு நவீன சிகிச்சை முறை பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல், கால்போஸ்கோபி குறித்த பயிலரங்கமானது நடைபெற்றது.

இதில் சென்னை சார்ந்த மூத்த மருத்துவர் மருத்துவர் ரமணி ராஜேந்திரன் அவர்கள் பயிலரங்கத்தை தலைமையேற்று நடத்தினார்.

மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கத் தலைவர் மரு.ஜெ. அமலா தேவி, செயலர் மரு. செல்வராணி ஜெயராமன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் மரு. கீதா ஆகியோர்கள் பயிலரங்கத்தை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மரு. வீரமணி குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தார். மரு. சுரேஷ்பாபு மற்றும் ஏராளமான மகப்பேறு மருத்துவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இரண்டாவது நாள் கருத்தரங்கிற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மருத்துவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் சுமூகமான தேர்வு ஏற்பட வழி செய்வதாகவும் பதிவு செய்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் நிர்மலா ஜெயசங்கர், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் தமிழ்நாடு கூட்டமைப்பு தலைவர் மரு. ரேவதி ஜானகிராமன், மதுரை நோவா செயற்கை கருத்தரிப்பு மையம் மரு. சிந்தியா மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here