திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலரங்கமானது நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி துவக்கி வைத்தார் .

இதை அகில இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல சங்க தென் மண்டல துணை தலைவர் சம்பத்குமாரி ஒருங்கிணைத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறை தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினர்.

பாக்சி ஜோகி இதழ் தலைமை பதிப்பாளர் கீதா பால்சர்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளைப் பற்றிய வழிமுறைகளை பகிர்ந்து கொண்டார்.

சேலம் மகப்பேறு மருத்துவர் அனுரேகா ஆய்வு கட்டுரைகளின் வகைகளை விளக்கினார். அகில இந்திய மகப்பேறு நல முன்னாள் துணைத் தலைவர் ரமணிதேவி ஆய்வு கட்டுரைகள் மறுக்கப்படுவது பற்றிய விளக்கங்களை அளித்தார்.

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சலீம் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு புள்ளியியல் பகுப்பாய்வு பற்றி விளக்கினார். மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கத் தலைவர் அமலா தேவி நன்றியுரை வழங்கினார் மற்றும் செயலர் செல்வராணி பயிலரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here